ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

திமுக - இந்திய கம்யூ. இடையே உடன்பாடு: 2 தொகுதிகள்?

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகளை ஒதுக்க திராவிட முன்னேற்ற கழகம் முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :29 பிப்ரவரி 2024, 5:16 am

DIN

மக்களவைத் தேர்தலையொட்டி திமுக - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடையே தொகுதிப் பங்கீடு குறித்த மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது.

மக்களவைத் தேர்தலையொட்டி கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு பணிகளை திமுக தீவிரப்படுத்தியுள்ளது. ஏற்கெனவே இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் எம்பி சுப்பராயன் தலைமையிலான குழுவுடன் திமுக பேச்சுவார்த்தை குழு இன்று மூன்றாம் கட்ட ஆலோசனை நடத்தியது.

இந்த ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சுப்பராயன்,

“ஏற்கெனவே போட்டியிட்டு வெற்றி பெற்ற திருப்பூர் மற்றும் நாகை தொகுதிகளை திமுகவிடம் கேட்டுள்ளோம். எங்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. ஓரிரு நாள்களில் இறுதி அறிவிப்பு வெளியாகும்.” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.