பொங்கல் தொகுப்பில் ரூ.1,500, முழு கரும்புஜி.கே.வாசன் வலியுறுத்தல்

குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பாக ரூ.1,500-மும், முழு கரும்பும் வழங்க வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.
ஜி.கே.வாசன்
ஜி.கே.வாசன்
Updated on
1 min read

சென்னை: குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பாக ரூ.1,500-மும், முழு கரும்பும் வழங்க வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.

அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழக அரசு வழங்கவுள்ள பொங்கல் தொகுப்பில் குறைந்தபட்சம் ரூ.1,500, முழு கரும்பு அவசியம் இடம் பெற வேண்டும்.

குறிப்பாக, இயற்கை சீற்றத்தால் சென்னை மற்றும் தென் மாவட்டங்கள் உள்ளிட்ட மற்ற மாவட்டப் பகுதிகளில் பெய்த கனமழை, பெரு வெள்ளம் போன்றவற்றால் விவசாயிகள், பொது மக்கள் பாதிக்கப்பட்டதை கவனத்தில் கொண்டு அதற்கேற்ப இந்த ஆண்டு பொங்கல் தொகுப்பை சற்று கூடுதலாக அளிக்க வேண்டும். கரும்பை கட்டாயமாக விவசாயிகளிடமிருந்து நேரிடையாக கொள்முதல் செய்து வழங்க வேண்டும் என்று கூறியுள்ளாா் ஜி.கே.வாசன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com