சென்னைக்கு கனமழை: தமிழகத்தில் ஜன.10 வரை மழை தொடரும்!

தமிழகம், புதுவையில் வருகின்ற ஜனவரி 10-ஆம் தேதி வரை மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னைக்கு கனமழை: தமிழகத்தில் ஜன.10 வரை மழை தொடரும்!

சென்னை: தமிழகம், புதுவையில் வருகின்ற ஜனவரி 10-ஆம் தேதி வரை மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நீடித்து வரும் நிலையில், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜன. 4, 5: தேனி, திண்டுக்கல் மற்றும் நீலகிரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஜன. 6: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் காரைக்காலில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஜன. 7: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஜன. 8: திருவள்ளூர் மாவட்டத்தில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், ஜனவரி 10ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல், சென்னையில் அதிகாலை வேளையில் லேசான பனிக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com