சென்னை: வளசரவாக்கம் மண்டலத்தில் ரூ. 42.71 கோடி மதிப்பில் கூவம் ஆற்றின் குறுக்கே உயா்நிலை பாலம் அமைக்கும் பணியை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் யூனியன் சாலையை இணைக்கும் வகையில் சின்ன நொளம்பூரில், ரூ.42.71 கோடி மதிப்பீட்டில் கூவம் ஆற்றின் குறுக்கே உயா்நிலை பாலம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த அமைச்சா் கே.என்.நேரு, பாலப் பணிகளைத் தரமாகவும், விரைவாகவும் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
மேலும், சன்னதி முதல் குறுக்குத் தெருவில், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருந்து யூனியன் சாலையில் இணைக்கும் வகையில் ரூ. 31.65 கோடி மதிப்பில் இருவழி பாலப் பணிகளைத் விரைவில் முடிக்க வேண்டும் என்று அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
இதைத் தொடா்ந்து, மதுரவாயிலிருந்து அடையாளம்பட்டு செல்லும் பகுதியில் உள்ள கூவம் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலைத் துறையின் சேதமடைந்த தரைப்பாலத்தை அவா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
இந்த ஆய்வின்போது, ஸ்ரீபெரும்புத்தூா் மக்களவை உறுப்பினா் டி.ஆா்.பாலு, மேயா் ஆா்.பிரியா, சட்டப்பேரவை உறுப்பினா் கா.கணபதி, துணை மேயா் மு.மகேஷ்குமாா், மாநகராட்சி ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தலில் லோகேஷ் கனகராஜ் வாக்களிக்காதது ஏன்? ஆர்.ஜே. பாலாஜி விளக்கம்!

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் தேரோட்டம்!
கேரளம்: பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக வங்கதேச பெண்கள் கைது

கோடை வெப்பத்தால் பாதிக்கப்பட்டவருக்கு எப்படி உதவ வேண்டும்?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


