தமிழகத்தில் அடுத்த 3 நாள்களுக்கு கனமழை பெய்யக்கூடும் சென்னை என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், தமிழகத்தின் ஜன. 9 - 11 வரை மூன்று நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, மற்றும் திருவண்ணாமலை, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜனவரி 10ஆம் தேதி ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதேபோன்று ஜனவரி 11ஆம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.