கனமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று காலை முதல் பரவலாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் கனமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், அரியலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், காரைக்கால், திருவாரூர், கடலூர், மயிலாடுதுரை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று(ஜன.8) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும், மேலும் புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் நாகை மாவட்டத்தில் நாகை, கீழ்வேளூர் தாலுகாக்களில் பள்ளிஇ கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.