பிப். 16-ல் அனைத்து ரயில்வே தொழிற்சங்கங்களும் வேலை நிறுத்தம்!

அனைத்து ரயில்வே தொழிற்சங்கங்கள் இணைந்து பிப்ரவரி 16 ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
பிப். 16-ல் அனைத்து ரயில்வே தொழிற்சங்கங்களும் வேலை நிறுத்தம்!

திருச்சி: அனைத்து ரயில்வே தொழிற்சங்கங்கள் இணைந்து பிப்ரவரி 16 ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். புதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ரயில்வே துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். தனியார் மயமாக்கலை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பு எஸ்.ஆர்.எம்.யூ. சார்பில் கடந்த மூன்று நாள்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக நான்காவது நாளான இன்று நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தெற்கு ரயில்வேயின்  எஸ்.ஆர்.எம்.யூ. தென் மண்டல தொழிற்சங்க தலைவர் சி.ஏ. ராஜா ஸ்ரீதர் தலைமை வகித்தார் . தொடர்ந்து அவர் பேசியதாவது:

மத்திய அரசுக்கு இந்த உண்ணாவிரதப் போராட்டம் என்பது ஒரு முன்னோட்டமாக நடத்தப்படுகிறது எனவே பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தனியார் மயமாக்கலை கைவிட வேண்டும். குறைந்த ஓய்வூதியத்தை அதிகப்படுத்தி வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்துள்ளோம். 

நாடு முழுவதும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி 30 லட்சம் தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வருகின்ற பிப்ரவரி 16 ஆம் தேதி நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் எஸ்.ஆர்.எம்.யூ.  துணை பொதுச் செயலாளர் எஸ். வீரசேகரன் மற்றும் நிர்வாகிகள், ஊழியர்கள் என சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com