கோப்புப்படம்
கோப்புப்படம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 18 காளைகளை அடக்கி கார்த்திக் முதலிடம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 18 காளைகளை அடக்கிய கார்த்திக் முதலிடம் பெற்றார்.
Published on

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 18 காளைகளை அடக்கிய கார்த்திக் முதலிடம் பெற்றார்.

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று காலை உறுதி மொழியுடன் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து போட்டியை தொடக்கி வைத்தார்.

இந்த ஜல்லிக்கட்டுப் போட்டி மாலை 6.20 வரை நடைபெற்றது. இப்போட்டியில் 18 காளைகளை அடக்கி  கருப்பாயூரணி கார்த்திக் முதலிடத்தைப் பெற்றார். 17 காளைகளை அடக்கிய அபிசித்தர் 2 ஆம் இடத்தையும், 12 காளைகளை அடக்கிய குன்னத்தூர் திவாகரன் 3-வது இடத்தையும் பிடித்தனர்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் முதலிடம் பெற்ற கார்த்திக்கிற்கு அமைச்சர் மூர்த்தி காரை பரிசாக வழங்கினார். இரண்டாம் இடம் பிடித்த அபிசித்தருக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com