ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 18 காளைகளை அடக்கி கார்த்திக் முதலிடம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 18 காளைகளை அடக்கிய கார்த்திக் முதலிடம் பெற்றார்.

News image
கோப்புப்படம்
Updated On :17 ஜனவரி 2024, 1:44 pm

DIN

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 18 காளைகளை அடக்கிய கார்த்திக் முதலிடம் பெற்றார்.

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று காலை உறுதி மொழியுடன் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து போட்டியை தொடக்கி வைத்தார்.

இந்த ஜல்லிக்கட்டுப் போட்டி மாலை 6.20 வரை நடைபெற்றது. இப்போட்டியில் 18 காளைகளை அடக்கி  கருப்பாயூரணி கார்த்திக் முதலிடத்தைப் பெற்றார். 17 காளைகளை அடக்கிய அபிசித்தர் 2 ஆம் இடத்தையும், 12 காளைகளை அடக்கிய குன்னத்தூர் திவாகரன் 3-வது இடத்தையும் பிடித்தனர்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் முதலிடம் பெற்ற கார்த்திக்கிற்கு அமைச்சர் மூர்த்தி காரை பரிசாக வழங்கினார். இரண்டாம் இடம் பிடித்த அபிசித்தருக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.