மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

முல்லைப் பெரியாறு அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு!

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு விநாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் வெள்ளிக்கிழமை முதல் திறந்து விடப்பட்டதால் மின்சார உற்பத்தி அதிகரித்தது.

News image

பெரியாறு நீர் மின்சார உற்பத்தி நிலையம் (கோப்புப்படம்).

Updated On :19 ஜனவரி 2024, 9:19 am

கம்பம்: முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு விநாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் வெள்ளிக்கிழமை முதல் திறந்து விடப்பட்டதால் மின்சார உற்பத்தி அதிகரித்தது.

முல்லைப் பெரியாறு அணையில் ஜன.17 இல் தமிழக பகுதிக்கு தண்ணீர் விநாடிக்கு 300 கன அடியாக திறக்கப்பட்டது. ஜன.18 இல் விநாடிக்கு 500 கன அடியாக திறக்கப்பட்டது. ஜன. 19  வெள்ளிக்கிழமை விநாடிக்கு 1000 கன அடியாகவும் திறக்கப்பட்டது.

இதனால் லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு நீர் மின்சார உற்பத்தி நிலையத்தில் 300 கன அடியாக வெளியேற்றும் போது 27 மெகாவாட் மின்சாரமும், 511 கன அடியாக தண்ணீர் வெளியேறும் போது 45 கன அடியாகவும், வெள்ளிக்கிழமை முதல் 1000 கன அடியாக திறந்த விடப்பட்டதால் மூன்று மின்னாக்கிகள் இயக்கப்பட்டு தலா 30 மெகாவாட் என மொத்தம் 90 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி தொடங்கியது.

அணை நிலவரம்

வெள்ளிக்கிழமை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 138.85 அடி (மொத்த உயரம் 152 அடி), நீர் இருப்பு 6836 மில்லியன் கன அடியாகவும், நீர் வரத்து விநாடிக்கு 282.64 கன அடியாகவும், தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் விநாடிக்கு 1000 கன அடியாகவும் இருந்தது. நீர் பிடிப்பு பகுதிகளான பெரியாறு அணை மற்றும் தேக்கடி ஏரியில் மழை பெய்யவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.