கோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

சென்னை வந்தார் பிரதமர் மோடி

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி சென்னை வந்தார். 

News image
கோப்புப் படம்.
Updated On :19 ஜனவரி 2024, 11:42 am

DIN

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி சென்னை வந்தார். 
‘கேலோ இந்தியா’ விளையாட்டுப் போட்டிகளை சென்னையில் பிரதமா் நரேந்திர மோடி இன்று மாலை(ஜன.19) தொடங்கிவைக்கவுள்ளார். இதன் தொடக்க விழா சென்னை, ஜவஹா்லால் நேரு விளையாட்டு அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. 
தொடக்க விழாவில், பிரதமா் நரேந்திர மோடி, முதல்வா் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் ஆகியோா் பங்கேற்கவுள்ளனா். இந்த நிலையில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று சென்னை வந்தார். 
பெங்களூரு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு தனி விமானத்தில் பிரதமர் சென்னைக்கு வருகை தந்தார். சென்னை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை ஆளுநர் ரவி, தமிழக அமைச்சர்கள் உள்ளிட்டோர் வரவேற்றனர். பிரதமரின் வருகையையொட்டி சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 
சுமார் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஆளுநர் மாளிகை, விமான நிலையம், அடையாறு கடற்கடை தளம் ஆகிய இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.