கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

அயோத்தி அரசியல் இந்தியாவில் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது: கே.எஸ்.அழகிரி

அயோத்தி ராமர் கோயில் அரசியல் இந்தியாவில் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். 

News image
அயோத்தி அரசியல் இந்தியாவில் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது
Updated On :23 ஜனவரி 2024, 7:37 am

DIN

கும்பகோணம்: அயோத்தி ராமர் கோயில் அரசியல் இந்தியாவில் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். 

கும்பகோணம் அருகே திருப்பனந்தாளை அடுத்த தத்துவாஞ்சேரியில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், சுதந்திரப் போராட்ட வீரருமான டி.ஆர். ராமாமிர்த தொண்டைமான் சிலையை செவ்வாய்க்கிழமை திறந்து வைத்த அவர் அளித்த பேட்டி:

அயோத்தி ராமர் கோயில் அரசியல் இந்தியாவில் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது. அயோத்தியில் 3 ஆயிரத்து 201 ராமர் கோயில்கள் உள்ளன. இந்தியாவில் எந்தப் பகுதியில் குடமுழுக்கு விழா நடைபெற்றாலும் அந்தப் பகுதி  விசேஷமாகத்தான் இருக்கும்.  

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ராமர் கோயில் வேண்டாம் என இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் கூடச் சொல்லவில்லை.

பாபர் மசூதியை பாஜகவினர் இடித்துவிட்டு அந்த இடத்தில் ராமர் கோயிலைக் கட்டுவதாகக் கூறினர். அயோத்தியில் எங்கே வேண்டுமானாலும் ராமர் கோயில் கட்டலாம் என சொன்னோம். ஆனால் பாபர் மசூதி இடத்தில் ராமர் கோயில் கட்டவில்லை. மூன்று கிலோ மீட்டருக்கு அப்பால் கட்டி இந்திய மக்களைத் திறமையாக நம்ப வைத்துள்ளனர்.

500 ஆண்டுக் கால அவமானங்கள் துடைக்கப்பட்டுள்ளது எனக் கூறுகின்றனர். இந்துகளுக்கு எப்போது அவமானம் ஏற்பட்டது. 300 ஆண்டுகளுக்கு மேல் முகலாய, ஐரோப்பிய அரசு ஆண்டபோது, இந்துக்கள்தான் பெரும்பான்மையாக இருந்தனர். இந்துக்கள் தாங்களாகவே வளர்த்துக் கொண்டனர். நாங்கள்தான் வளர்த்தோம் எனக் கூறிக் கொள்வதற்கு ஆர்.எஸ்.எஸ். யார்? 

கோயில் கும்பாபிஷேகத்தை அரசியல் ஆக்குகின்றனர். இதனால் இந்து மதத்துக்கோ, ராமருக்கோ எந்தப் பெருமையும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் மனைவியைக் கூட கவனிக்க முடியாத ஒருவர் ராமர் சிலையைப் பிரதிஷ்டை செய்வது தவறு என்றார் அழகிரி.

அப்போது, ம.தி.மு.க முதன்மைச் செயலர் துரை. வைகோ, முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர், வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.ஆர். லோகநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.