கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

குடியரசு தினம், தைப்பூசம் விடுமுறை: கூடுதலாக 580 சிறப்புப் பேருந்துகள்

குடியரசு நாள், தைப்பூசம் என தொடர் விடுமுறை நாள்கள் வருவதால் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. 

கோப்புப் படம்

Published On :

குடியரசு தினம், தைப்பூசம் விடுமுறை தினத்தை முன்னிட்டு, புதன்கிழமை(ஜன.24), வியாழக்கிழமை(ஜன.25) ஆகிய இரு நாள்களில் கூடுதலாக 580 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வியாழக்கிழமை(ஜன.25) தைப்பூசம், வெள்ளிக்கிழமை(டிச.26) குடியரசு தின விடுமுறை. இதைத்தொடா்ந்து சனி (ஜன.27), ஞாயிறு(ஜன.28) ஆகிய நாள்கள் வார விடுமுறை நாள்கள். ஆக மொத்தம் 4 நாள்கள் விடுமுறை என்பதால் புதன்கிழமை (ஜன.24), வியாழக்கிழமை(ஜன.25) ஆகிய நாள்களில் கோயம்பேடு, கிளாம்பாக்கம் மற்றும் பிற பேருந்து நிலையங்களிலிருந்தும், பிற இடங்களிலிருந்தும் கூடுதலாக பொதுமக்கள் தங்கள் பயணத்தை மேற்கொள்வா்.

இதை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சாா்பில் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி, சென்னையிலிருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு புதன்கிழமை (ஜன.24), வியாழக்கிழமை(ஜன.25) ஆகிய தேதிகளில் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 405 சிறப்பு பேருந்துகளும், கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் போன்ற இடங்களிலிருந்து முக்கிய பகுதிகளுக்கும், பெங்களூரிலிருந்து பிற இடங்களுக்கும் 175 சிறப்பு பேருந்துகள் என ஆக மொத்தம் 580 சிறப்புப் பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.

மேலும், ஞாயிற்றுக்கிழமை(ஜன.28) சொந்த ஊா்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூா் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள்: இதுபோல, வியாழக்கிழமை (ஜன.25) பெளா்ணமி தினத்தை முன்னிட்டு, சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு 10 குளிா்சாதன பேருந்துகள் காலை 10 மணி முதல் இயக்கப்படவுள்ளன. இந்தப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.