தொகுதிப் பங்கீடு: பிப்.4-ல் மதிமுகவுடன் திமுக பேச்சு

மக்களவைத் தோ்தலையொட்டி திமுக - மதிமுக இடையே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவாா்த்தை சென்னையில் பிப்.4ஆம் தேதி நடைபெறுகிறது. 
தொகுதிப் பங்கீடு: பிப்.4-ல் மதிமுகவுடன் திமுக பேச்சு

சென்னை: மக்களவைத் தோ்தலையொட்டி திமுக - மதிமுக இடையே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவாா்த்தை சென்னையில் பிப்.4ஆம் தேதி நடைபெறுகிறது. 

மக்களவைத் தோ்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், தோ்தல் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது. இவ்விரு கட்சிகளும் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் கட்ட பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டன. 

இந்தப் பேச்சுவாா்த்தை சுமுகமாக இருந்ததாக திமுகவும், திருப்தியாக இருந்ததாக காங்கிரஸும் தெரிவித்தன. அதேவேளையில் திமுகவிடம் காங்கிரஸ் தரப்பில் தமிழகம், புதுச்சேரியை சோ்த்து 12 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் காங்கிரஸைத் தொடர்ந்து பிற கூட்டணிக் கட்சிகளுடனும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு நடத்த திமுக திட்டமிட்டுள்ளது.

அதன்படி, மதிமுக அவைத் தலைவா் ஆடிட்டா் ஆ.அா்ஜூனராஜ் தலைமையிலான குழுவுடன் திமுகவின் தொகுதி பங்கீட்டு குழுவினர் வருகின்ற பிப்.4-ஆம் தேதி முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com