சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

புதிய பாதையில் பயணிக்கும் பல்கலை.கள்: யுஜிசி தலைவர்

நாட்டின் பல்கலைக்கழங்கள் புதிய பாதையில் பயணிப்பதாக பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவர் ஜெகதீஸ் குமார் தெரிவித்தார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 8:09 am

DIN

நாட்டின் பல்கலைக்கழங்கள் புதிய பாதையில் பயணிப்பதாக பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவர் ஜெகதீஸ் குமார் தெரிவித்தார்.

சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் நடத்தப்பட்ட கல்விச் சிந்தனை அரங்கு ஜன. 24ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை  இருநாள்கள் நடைபெற்றது.

கல்விச் சிந்தனை அரங்கில், ஒழுங்குமுறை அமைப்புகள் என்ற தலைப்பில் பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவர் ஜெகதீஸ் குமார் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசியதாவது:

“மாணவர்களிடையே அடிப்படை கல்வியறிவை மேம்படுத்துதல், கல்வியில் எண்ம தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல், எதிர்காலத்தினருக்கு கல்வியை எளிதாக்குவதை நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம்.

இதில் ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு, திறன், கலாச்சாரம், ஒருங்கிணைப்பு, தலைமைத்துவம், பாடத்திட்டம், உள்கட்டமைப்பு உள்ளிட்டவையும் அடங்கும்.

கடந்த 70 ஆண்டுகளாக மாற்ற இயலாத தன்மையை கல்விக் கட்டமைப்பில் வேரூன்றியிருந்த பல்கலைக்கழக அமைப்பு, இப்போது புதிய பாதையில் பயணிக்கும் தருணத்தில் உள்ளது.

உள்கட்டமைப்பு மற்றும் செயல்படுத்துவதற்கான நிதி சிக்கல்கள் போன்றவை ஒப்புக்கொள்கிறேன், அதே வேளையில், நமது கல்வி முறை புதுமைகளை நோக்கி நகர்வது இன்றியமையாதது.

தேசிய கல்விக் கொள்கையானது உயர்கல்வி ஆணையத்தை உருவாக்குவதற்கு பரிந்துரைக்கிறது. அது நிறுவப்பட்டால், பொதுவான சீர்திருத்தங்களை செய்ய முடியும்.

உயர்தர கல்வியை எளிதாகவும், மலிவாகவும் வழங்க எண்ம தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது அவசியம். அடுத்தாண்டு 50 லட்சம் ஆசிரியர்களுக்கு உயர்கல்வி தொடர்பான பயிற்சி வழங்கப்படவுள்ளது.” என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.