நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது: நடிகர் விஜய்

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று விஜய் பரிந்துரை.
நடிகர் விஜய்
நடிகர் விஜய்
Published on
Updated on
1 min read

நீட் தேர்வு விலக்கு குறித்து மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழாவில் நடிகர் விஜய் பேசியுள்ளார்.

சென்னை உள்ளிட்ட 19 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கல்வி விருது வழங்கும் இரண்டாம் கட்ட நிகழ்வு இன்று நடைபெற்று வருகின்றது.

இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் பேசியதாவது:

“நீட் தேர்வால் தமிழக கிராமத்தில் உள்ள ஏழை மாணவர்கள், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது சத்தியமான உண்மை. நீட் தேர்வில் உள்ள மூன்று பிரச்னைகள் என்னவென்றால் மாநில உரிமைக்கு எதிராக உள்ளது.

1975-க்கு முன்னால் கல்வி என்பது மாநில பட்டியலில் தான் இருந்தது. அதன்பிறகு தான் மத்திய அரசின் கீழ் வந்தது. இரண்டாவது ஒரே நாடு ஒரே பாடத்திட்டம் ஒரே தேர்வு என்பது கல்வி கற்கும் நோக்கத்துக்கு எதிரானது. ஒவ்வொரு மாநிலத்துக்கு ஏற்றவாறு பாடத்திட்டம் இருக்க வேண்டும். மாநில கல்வித்திட்டத்தில் படித்துவிட்டு என்சிஆர்டி திட்டத்தில் தேர்வு வைப்பது, குறிப்பாக மருத்துவ படிப்புகளுக்கு வைப்பது கடினமான ஒன்று.

நடிகர் விஜய்
‘ஆளப்போறான் தமிழன்’ பாடலுடன் மேடையேறிய விஜய்!

மூன்றாவது, நீட் குளறுபடி நடந்தது அனைவருக்கும் தெரியும். இதன்மூலம் நீட் மீதான நம்பகத்தன்மை மக்கள் மத்தியில் இழந்துவிட்டது. நீட் தேர்வு விலக்கு கோரி தமிழக சட்டப்பேரவை கொண்டு வந்துள்ள தீர்மானத்தை மனப்பூர்வமாக வரவேற்கிறேன். காலதாமதம் செய்யாமல் ஒன்றிய அரசு தமிழகத்தின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

நிரந்தர தீர்வாக பொதுப் பட்டியலில் இருந்து கல்வியை நீக்கி மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும். அதில் சிக்கல் இருப்பின், அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்து சிறப்புப் பொதுப் பட்டியல் என்று உருவாக்கி கல்வி, சுகாதாரத்தை கொண்டு வரவேண்டும். மாநில அரசுக்கு கல்வி, சுகாதாரத்தில் முழு சுதந்திரத்தை தர வேண்டும். எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற ஒன்றிய அரசின் கல்லூரிகளுக்கு வேண்டுமென்றால் நீட் நடத்திக் கொள்ளட்டும். நீட் தேர்வு வேண்டாம் என்பது எனது பரிந்துரை, ஆனால் அதனை ஏற்க மாட்டார்கள்.” எனத் தெரிவித்தார்.

முதல்கட்டமாக ஜூன் 28ல் கோவை, ஈரோடு, மதுரை உள்ளிட்ட 21 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு தொகுதிவாரியாக தவெக தலைவரும் நடிகருமான விஜய் ஊக்கத்தொகை வழங்கினார்.

அப்போது, தமிழ்நாட்டுக்கு நல்ல தலைவர்கள் தேவை, நன்கு படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்றும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் குறித்தும் நடிகர் விஜய் பேசியிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com