அமாவாசை, வாரவிடுமுறை:
1,055 கூடுதல் பேருந்துகள்

அமாவாசை, வாரவிடுமுறை: 1,055 கூடுதல் பேருந்துகள்

அமாவாசை, வாரவிடுமுறை: தமிழகத்தில் 1,055 கூடுதல் பேருந்துகள்
Published on

அமாவாசை, வாரவிடுமுறை தினங்களை முன்னிட்டு 1,055 கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை (ஜூலை 5) 415 பேருந்துகளும், சனிக்கிழமை (ஜூலை 6) 310 பேருந்துகளும் இயக்கப்படும்.

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளி, சனி ஆகிய நாள்களில் தலா 55 பேருந்துகள் என மொத்தம் 110 பேருந்துகளும், பெங்களூா், திருப்பூா், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும்.

மேலும், வார இறுதி நாள்களை முன்னிட்டு கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தலா 15 பேருந்துகள் வீதம் மொத்தம் 30 பேருந்துகளும் இயக்கப்படும்.

இதுதவிர, ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊா்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூா் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பயணிகள் முன்பதிவு செய்து பயணத்தை மேற்கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com