2-ம் கட்ட பரிசளிப்பு: மண்டபத்துக்கு விஜய் வருகை!
முதல்கட்ட பரிசளிப்பு விழா ஜூன் 28-இல் நடைபெற்றது.


தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு இரண்டாம் கட்டமாக இன்று ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது.
முதல்கட்டமாக ஜூன் 28ல் கோவை, ஈரோடு, மதுரை உள்ளிட்ட 21 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு தொகுதிவாரியாக தவெக தலைவரும் நடிகருமான விஜய் ஊக்கத்தொகை வழங்கினார்.
இந்த நிலையில், சென்னை உள்ளிட்ட 19 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு இன்று ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நடிகர் விஜய் திருவான்மியூரில் உள்ள திருமண மண்டபத்துக்கு வருகை தந்துள்ளார்.
முதல்கட்ட பரிசளிப்பு விழாவில், தமிழ்நாட்டுக்கு நல்ல தலைவர்கள் தேவை என்றும், நன்கு படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்றும் நடிகர் விஜய் பேசியிருந்தார்.
மேலும், இரண்டாம் கட்ட விழாவில் பேசப் போவதில்லை என்று விஜய் கூறியிருந்த நிலையில், இம்முறையும் அவர் பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...