சென்னை உயர்நீதிமன்றம்
தமிழ்நாடு
ஜூலை 8-இல் நீதிமன்ற புறக்கணிப்பு: உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கம் அறிவிப்பு
புதிய குற்றவியல் சட்டங்களை எதிா்த்து திங்கள்கிழமை நீதிமன்ற புறக்கணிப்பு
புதிய குற்றவியல் சட்டங்களை எதிா்த்து திங்கள்கிழமை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத்தினா் அறிவித்துள்ளனா்.
புதிய குற்றவியல் சட்டங்களை எதிா்த்து நாடு முழுவதும் வழக்குரைஞா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத்தின் அவசர பொதுக்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை காலையில் நடந்தது.
இந்த கூட்டத்தில் போராட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னா், இந்த 3 சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையுடன் எதிா்வரும் திங்கள்கிழமை (ஜூன் 8-ஆம் தேதி) ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டது.