ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பான நகரம் சென்னை: சந்தீப் ராய் ரத்தோர்

நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பான நகரமாக சென்னை உள்ளது என்கிறார் சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்.

News image
செய்தியாளர் சந்திப்பில் சென்னை மாநகர காவல் ஆணையர்
Updated On :6 ஜூலை 2024, 10:58 am

DIN

சென்னை: இந்தியாவிலேயே, பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை என தெரிவித்துள்ளார் சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்.

சென்னை வேப்பேரியில் அமைந்துள்ள  சென்னை காவல் ஆணையர் தலைமை அலுவலகத்தில் சென்னை மாநகராட்சி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் செய்தியாளர்களை சந்தித்தார்.

சென்னை பெரம்பூரில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது கொலை வழக்கு விசாரணை மற்றும் பின்னணி தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது, இந்தியாவிலேயே, பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை. இதனை நாங்கள் செல்லவில்லை ஆய்வில் சொல்லியுள்ளார்கள். கடந்த 6 மாதங்களில் கொலை குற்றங்களைப் பொறுத்தவரை, கடந்த காலங்களை ஒப்பிடும் போது தற்போது குறைந்துள்ளது. கடந்த 2023ல் முதல் 6மாதங்களில் 63 கொலை நடைபெற்றுள்ளது. இவ்வாண்டு அது 58ஆக குறைந்துள்ளது.

சென்னை நகரை பொறுத்தவரை பொதுமக்கள் பாதுகாப்பு காவல்துறைக்கு மிக முக்கியம். எப்போதும் பொதுமக்களுக்கு உதவியாக உள்ளோம். எந்தக் குற்றம் நடைபெற்றாலும் அதன் மீது உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது என்றார்.

முன்னதாக, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்குக் குறித்து பேசிய சந்தீப் ராய் ரத்தோர், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், சரியான விசாரணைக்கு பின் கூடுதல் விபரங்கள் தெரிவிக்கப்படும். குற்றவாளிகள் சரணடையவில்லை. முறையான, விரைவான விசாரணைக்குப் பின் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் சரணடையவில்லை முறையான விரைவான விசாரணைக்கு பின் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.