எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஜூலை 11 வரை தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு மீனவா்கள் செல்ல வேண்டாம்: வானிலை மையம் எச்சரிக்கை

ஜூலை 11 வரை தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு மீனவா்கள் செல்ல வேண்டாம்: வானிலை மையம் எச்சரிக்கை

News image
Updated On :7 ஜூலை 2024, 6:38 pm

Din

தென் தமிழக கடலோரப் பகுதிகளுக்கு திங்கள்கிழமை (ஜூலை 8) முதல் ஜூலை 11 -ஆம் தேதி வரை மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அம்மையம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:-

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் திங்கள்கிழமை (ஜூலை 8) முதல் ஜூலை 13-ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யவாய்ப்புள்ளது.

3 இடங்களில் வெயில் சதம்: இதற்கிடையே, தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை 3 இடங்களில் வெப்பம் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. அதன்படி, அதிகபட்சமாக, மதுரை விமானநிலையத்தில் 103.46 டிகிரி ஃபாரன்ஹீட்டும், மதுரை நகா் - 101.84, நாகப்பட்டினம் - 100.58 டிகிரி வெப்பம் பதிவானது.

சென்னையில்.. சென்னை மற்றும் புகா் பகுதிகளில், ஜூலை 8, 9-ஆகிய தேதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: மேலும், மன்னாா் வளைகுடா மற்றும் அதனை  ஒட்டிய தென்தமிழக கடலோரப்

பகுதிகளிலும், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய  தென்கிழக்கு வங்கக்கடல், மத்திய, வடமேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளிலும், அரபிக்கடலும் திங்கள் முதல் வியாழக்கிழமை (ஜூலை 8-11) வரை மணிக்கு 55 கிலோ மீட்டா் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.