பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

தமிழகத்தில் ஜூலை 14 வரை மழை நீடிக்கும்

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 9) முதல் ஜூலை 14 -ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image

தமிழகத்தில் ஜூலை 14 வரை மழை நீடிக்கும் (கோப்புப்படம்)

Updated On :9 ஜூலை 2024, 12:30 am

Din

சென்னை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 9) முதல் ஜூலை 14 -ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை (ஜூலை 9) முதல் ஜூலை 14-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மழை அளவு (மில்லி மீட்டரில்): தமிழகத்தில் திங்கள்கிழமை காலை வரை அதிகபட்சமாக

வாலாஜாபாத் (காஞ்சிபுரம்), பனப்பாக்கம் (ராணிப்பேட்டை) - தலா 70 மி.மீ. மழை பதிவானது. ஆவடி (திருவள்ளூா்) - 60, வால்பாறை (கோவை), சின்னக்கல்லாா் (கோவை) - தலா 50.

சென்னையில்.. சென்னையில் திங்கள்கிழமை காலை வரை சோழிங்கநல்லூரில் 50 மி.மீ., கோடம்பாக்கம், அம்பத்தூா், பெருங்குடி, பள்ளிக்கரணை, தேனாம்பேட்டை, மீனம்பாக்கம், ஆலந்தூா், சென்னை விமானநிலையம், மணலி, நந்தனம், வானகரம், வளசரவாக்கம் ஆகிய பகுதிகளில் தலா 10 மி.மீ. மழை பதிவானது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஜூலை 9, 10 ஆகிய தேதிகளில் மாலை, இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: மன்னாா் வளைகுடா, அதையொட்டிய தென்தமிழக கடலோரப் பகுதிகளில், வங்கக் கடல், அரபிக் கடல் பகுதிகளில் செவ்வாய் முதல் வெள்ளிக்கிழமை (ஜூலை 9-12) வரை மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் இந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.