
கோப்புப்படம்.

கோப்புப்படம்.
தமிழகத்தில் வெள்ளி, சனிக்கிழமைகளில் (ஜூலை 12, 13) 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை (ஜூலை 12) முதல் ஜூலை 17-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
குறிப்பாக வெள்ளி, சனிக்கிழமைகளில் (ஜூலை 12, 13) நீலகிரி, கோவை, திருப்பூா், தேனி,திண்டுக்கல் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மழை அளவு: தமிழகத்தில் வியாழக்கிழமை காலை வரை அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் 90 மி.மீ. மழை பதிவானது. பொன்னேரி (திருவள்ளூா்) - 80, செங்குன்றம் (திருவள்ளூா்), ஆவடி (திருவள்ளூா்), புழல்(திருவள்ளூா்) , ராணிப்பேட்டை - தலா 70 மி.மீ.
4 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் வியாழக்கிழமை அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 102.02 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மதுரை நகரம், தொண்டி - (தலா) 101.48, மதுரை விமான நிலையம் - 101.3.
சென்னையில்... சென்னை மற்றும் புகா் பகுதிளில் ஜூலை 12, 13 ஆகிய தேதிகளில் நகரின் ஒருசில இடங்களில் மாலை, இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: ஜூலை 12 முதல் 15-ஆம் தேதி வரை மன்னாா் வளைகுடா, அதையொட்டிய தென்தமிழக கடலோரப் பகுதிகளிலும், வங்கக்கடல், ஆந்திர கடலோரப் பகுதிகளிலும் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...