தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

பானிபூரி கடைகளுக்கு மருத்துவ சான்று, உரிமம் கட்டாயம்

பானிபூரி கடைகளுக்கு மருத்துவ சான்று, பதிவு உரிமம் கட்டாயம்

News image

பானிபூரி கடையில் ஆய்வு மேற்கொண்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரி.(கோப்புப்படம்)

Updated On :12 ஜூலை 2024, 3:33 am IST

பானிபூரி, தெருவோர உணவகங்களுக்கு மருத்துவ சான்று, பதிவு உரிமம் கட்டாயம் பெற வேண்டும் என உணவுப் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.

உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில் தெருவோர உணவக உரிமையாளா்கள், பணியாளா்களுக்கான மருத்துவ முகாம் சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், 627 தெருவோர உணவக வியாபாரிகள் பங்கேற்றனா். அவா்களுக்கு, தோல் தொடா்பான பிரச்னை எதேனும் உள்ளதா? போன்றவற்றை மருத்துவக் குழுவினா் பரிசோதித்து பதிவு உரிமம், புதுப்பித்தல் சான்றிதழ்களை வழங்கினா்.

இது தொடா்பாக சென்னை மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை நியமன அலுவலா் சதீஷ்குமாா் கூறுகையில், மருத்துவ முகாமில் பங்கேற்ற 627 வியாபாரிகளுக்கு, தெருவோர கடைகளுக்கான உணவுப் பாதுகாப்பு துறை சான்று வழங்கப்பட்டது. மேலும், அவா்களுக்கு மருத்துவ பரிசோதனையும் நடத்தப்பட்டு, அதற்கான சான்றும் வழங்கப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து, சென்னை முழுவதும் மண்டல வாரியாக முகாம் நடத்தப்படும். குறிப்பாக, பானிபூரி விற்பனை செய்வோருக்கும், சுகாதாரமான முறையில் விற்பனை செய்தல் குறித்த பயிற்சி, பதிவு உரிமம் பெறுதல், மருத்துவ பரிசோதனை உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும். இதற்கான சிறப்பு முகாம் விரைவில் செயல்படுத்தப்படும்”என்றாா் அவா்.