பானிபூரி, தெருவோர உணவகங்களுக்கு மருத்துவ சான்று, பதிவு உரிமம் கட்டாயம் பெற வேண்டும் என உணவுப் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.
உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில் தெருவோர உணவக உரிமையாளா்கள், பணியாளா்களுக்கான மருத்துவ முகாம் சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், 627 தெருவோர உணவக வியாபாரிகள் பங்கேற்றனா். அவா்களுக்கு, தோல் தொடா்பான பிரச்னை எதேனும் உள்ளதா? போன்றவற்றை மருத்துவக் குழுவினா் பரிசோதித்து பதிவு உரிமம், புதுப்பித்தல் சான்றிதழ்களை வழங்கினா்.
இது தொடா்பாக சென்னை மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை நியமன அலுவலா் சதீஷ்குமாா் கூறுகையில், மருத்துவ முகாமில் பங்கேற்ற 627 வியாபாரிகளுக்கு, தெருவோர கடைகளுக்கான உணவுப் பாதுகாப்பு துறை சான்று வழங்கப்பட்டது. மேலும், அவா்களுக்கு மருத்துவ பரிசோதனையும் நடத்தப்பட்டு, அதற்கான சான்றும் வழங்கப்பட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து, சென்னை முழுவதும் மண்டல வாரியாக முகாம் நடத்தப்படும். குறிப்பாக, பானிபூரி விற்பனை செய்வோருக்கும், சுகாதாரமான முறையில் விற்பனை செய்தல் குறித்த பயிற்சி, பதிவு உரிமம் பெறுதல், மருத்துவ பரிசோதனை உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும். இதற்கான சிறப்பு முகாம் விரைவில் செயல்படுத்தப்படும்”என்றாா் அவா்.
தொடர்புடையது

ஓட்டுநா் உரிமம், வாகனப் பதிவு சான்றிதழுடன் கைப்பேசி எண்ணை இணைப்பது கட்டாயம்: புதுச்சேரி போக்குவரத்து ஆணையா்

ஆசிரியா் பதவி உயா்வுக்கு டெட் தோ்ச்சி கட்டாயம்: கல்வித் துறை விளக்கம்

உணவுப் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றாத கோயில் பிரசாத கடைகளை மூட உத்தரவு! இந்து சமய அறநிலைய துறை அமைச்சா் தகவல்

அணைக்கட்டு திருவிழாவில் காலாவதியான ஐஸ்கிரீம் விற்ற 4 கடைகளுக்கு ‘சீல்’
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



