சொத்துத் தகராறில் தந்தை வேன் ஏற்றிக் கொலை: மகன் தலைமறைவு

தந்தையை வேன் ஏற்றி கொன்ற மகன் தலைமறைவு: போலீசார் தீவிர விசாரணை
சொத்துத் தகராறில் தந்தை வேன் ஏற்றிக் கொலை: மகன் தலைமறைவு
Published on
Updated on
1 min read

பூந்தமல்லியில் சொத்துத் தகராறு காரணமாக தந்தையை வேன் ஏற்றி கொலை செய்த மகனை போலீஸார் தேடி வருகின்றனர்.

பூந்தமல்லி அருகே பாரிவாக்கம், பாலீஸ்வரர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (63). இவரது மகன் வெங்கடேசன்(26). இந்த நிலையில், புதன்கிழமை இரவு ராஜேந்திரன் தனது வீட்டின் அருகே தனக்கு சொந்தமான நிலத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக திடீரென்று வேகமாக வந்த வேன் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.

இதில் வேன் சக்கரத்தில் சிக்கி ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவறிந்து வந்த பூந்தமல்லி போலீஸார் ராஜேந்திரனின் உடலை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸார் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை ஆய்வு செய்தபோது, ராஜேந்திரனை அவரது மகன் வெங்கடேசன் வேனை ஏற்றிக் கொலை செய்தது தெரியவந்தது.

தொடர் விசாரணையில், ராஜேந்திரன் தனது சொத்துகளை தனது மகள்களுக்கு எழுதி வைப்பதற்கு முடிவு செய்து இருந்ததாகவும், மேலும் ராஜேந்திரனுக்கும், வெங்கடேசனுக்கும் ஏற்கெனவே சொத்துப் பிரச்னை இருந்து வந்ததும் தெரியவந்தது.

புகாரின்பேரில், பூந்தமல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தனிப்படை அமைத்து வெங்கடேசனை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com