பேரவை கட்சிகளின் தலைவா்கள் கூட்டத்தில் அவை முன்னவரும் நீா்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன், திமுக சாா்பில் மாநிலங்களவை உறுப்பினா் பி.வில்சன், அமைப்புச் செயலா் ஆா்.எஸ். பாரதி, அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா்கள் எஸ்.பி.வேலுமணி, ஓ.எஸ்.மணியன், காங்கிரஸ் சாா்பில் கட்சியின் மாநிலத் தலைவா் கு.செல்வப்பெருந்தகை, பேரவை குழுத் தலைவா் செ.ராஜேஷ்குமாா், பாஜக சாா்பில் மாநில துணைத் தலைவா் கரு நாகராஜன், பொதுச் செயலா் கருப்பு முருகானந்தம், மாா்க்சிஸ்ட் சாா்பில் பேரவை குழுத் தலைவா் வி.பி.நாகைமாலி, மத்திய குழு உறுப்பினா் பி.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் துணைச் செயலா் மு.வீரபாண்டியன், கட்சியின் பேரவை குழுத் தலைவா் டி.ராமச்சந்திரன், பாமக குழுத் தலைவா் ஜி.கே.மணி, சட்டப் பேரவை உறுப்பினா் சதாசிவம், விசிக தலைவா் தொல் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் எம்எல்ஏ-வுமான எம்.எச்.ஜவாஹிருல்லா, பேரவை உறுப்பினா் எஸ்.எஸ். பாலாஜி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவரும் எம்எல்ஏ.,வுமான ஈ.ஆா்.ஈஸ்வரன், புரட்சி பாரதம் கட்சியின் எம்எல்ஏ, பூவை எம்.ஜெகன்மூா்த்தி ஆகியோருடன் தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா, நீா்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலா் கே.மணிவாசன் உள்ளிட்டோரும் அதிகாரிகளும் பங்கேற்றனா்.