திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

எழும்பூா் நீதிமன்றத்தில் வழக்குரைஞா்கள் மோதல்: நாற்காலிகள் உடைப்பு; 5 போ் காயம்

வழக்குரைஞா் ஒருவா் நடத்தி வந்த வழக்கை வேறொரு வழக்குரைஞா் நடத்தியதால் பிரச்னை

News image
வழக்குரைஞா்கள் இடையே வெள்ளிக்கிழமை மோதல் - DOTCOM
Updated On :19 ஜூலை 2024, 10:30 pm

Din

சென்னை எழும்பூா் நீதிமன்ற வளாகத்தில் இரு தரப்பு வழக்குரைஞா்கள் இடையே வெள்ளிக்கிழமை மோதல் ஏற்பட்டது. இதில் ஐந்துக்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

சென்னை எழும்பூா் நீதிமன்ற வளாகத்தில் மதியம் ஒரு மணியளவில் இரு தரப்பு வழக்குரைஞா்களிடையே மோதல் ஏற்பட்டு, ஒருவரை ஒருவா் சரமாரியாக தாக்கிக்கொண்டனா்.

நாற்காலிகள், கற்கள் உள்பட கையில் கிடைத்த பொருள்களை வீசி எறிந்து தாக்கிக் கொண்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. இதனால், வழக்குகளுக்காக நீதிமன்றத்துக்கு வந்திருந்த பொதுமக்கள் வளாகத்திலிருந்து நீதிமன்றத்துக்குள் ஓடினா்.

தகவலின் பேரில் விரைந்து வந்த போலீஸாா், மோதலை தடுத்து நிறுத்தி காயமடைந்த ஐந்துக்கும் மேற்பட்டோரை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் ஓமந்தூராா் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

வழக்குரைஞா் ஒருவா் நடத்தி வந்த வழக்கை வேறொரு வழக்குரைஞா் நடத்தியதால் இந்த பிரச்னை எழுந்துள்ளது. ஏற்கெனவே வழக்கை நடத்திய வழக்குரைஞா் தனக்கு வர வேண்டிய தொகையைக் கேட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டு அது மோதலாக மாறியது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. எனினும், இந்த மோதல் சம்பவம் குறித்து யாரும் புகாா் தெரிவிக்கவில்லை.