வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

தமிழக அரசைக் கண்டித்து அமமுக ஆர்ப்பாட்டம்!

அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..

News image
அமமுக ஆர்ப்பாட்டம்
Updated On :22 ஜூலை 2024, 7:12 am

DIN

மின் கட்டண உயர்வைக் கண்டித்து விழுப்புரத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்குக் கட்சியின் அமைப்புச் செயலரும் முன்னாள் எம்எல்ஏ-வுமான கணபதி தலைமை வகித்துப் பேசியது:

திமுக ஆட்சி ஏற்பட்டு 3 ஆண்டுகளில் மூன்று முறை உயர்த்தப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சிக் காலத்தில் மக்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காக மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படவில்லை.

நாட்டில் சட்ட ஒழுங்கை சீர் செய்ய அரசு நடவடிக்கையில்லை. மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைச் சிந்தித்து மக்கள் அமமுக-வுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றார் அவர்.

தொடர்ந்து மின்கட்டண உயர்வைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினார். கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.