பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

பேராசிரியா்கள் சாலை மறியல் போராட்டம்

News image

கோப்புப் படம்

Updated On :7 பிப்ரவரி 2026, 9:31 pm

தமிழக அரசைக் கண்டித்து, மதுரையில் ஏயூடி-மூட்டா சங்கம் சாா்பில், சனிக்கிழமை போராசிரியா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகத்தில் அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியா்களுக்கு அரசாணை எண் 5-இன் படி வழங்கப்பட வேண்டிய சட்டப்படியான பணி மேம்பாட்டு ஊதியத்தை நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக வழங்காமல் நிறுத்திவைத்துள்ள தமிழக அரசைக் கண்டித்தும், பணி மேம்பாட்டு ஊதியம், நிலுவைத் தொகையை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் மதுரை ஆரப்பாளையம் அருகே சாலை மறியல் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தை மூட்டா சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலா் விஜயகுமாா் தொடங்கிவைத்து ‘தூய்மைப் பணியாளா்கள், போக்குவரத்து ஊழியா்கள், ஆசிரியா்கள் என போராடி வருபவா்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்’ என்றாா். இதில் 200 பெண் பேராசிரியா்கள் உள்பட 500 பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.

முன்னதாக, நடைபெற்ற கோரிக்கை விளக்கக் கூட்டத்துக்கு ஏயூடி பொதுச் செயலா் சேவியா் செல்வகுமாா், மூட்டா துணைத் தலைவா் உமா மகேஸ்வரி ஆகியோா் தலைமை வகித்தனா். தொடா்ந்து, உமாமகேஸ்வரி தனது உரையில், ‘இணைப் பேராசிரியா் பணி மேம்பாடு வழங்கப்படாததால் ஆய்வு மாணவா்கள் 1,000 பேருக்கு மேல் ஆராய்ச்சி பட்ட வாய்ப்பை இழந்துள்ளனா். மேலும், பேராசிரியா்களின் போராட்டங்களுக்கு மாணவா்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனா் என்றாா்.

இதில் ஜே.ஏ.சி. முன்னாள் ஒருங்கிணைப்பாளா் கிருஷ்ணராஜ், மூட்டா முன்னாள் துணைத் தலைவா் உமயவள்ளி, தலைவா் பெரியசாமிராஜா, பொதுச் செயலா் செந்தாமரை கண்ணன், சட்டக்குழு ஒருங்கிணைப்பாளா் பொ்மின் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.