கோவை பீளமேடு அருகே தனியார் ஆம்னிபேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலையில் இருந்து 30 பயணிகளுடன் குளிர்சாதன வசதி கொண்ட தனியார் ஆம்னி பேருந்து கோவை நோக்கி புறப்பட்டது.
இந்தப் பேருந்தை ஓட்டுநர் தாஸ் என்பவர் ஓட்டி வந்தார். கோவை சித்ரா அருகே இன்று காலை 6.00 மணி அளவில் வந்துகொண்டிருந்தபோது பேருந்தில் திடீரென புகை வருவதைக் கண்ட ஓட்டுநர் தாஸ் உடனடியாக சாலை ஓரமாக பேருந்தை நிறுத்தினார்.
அதில் இருந்த பயணிகள் அனைவரையும் கீழே இறங்குமாறு கூறினார். தூங்கிக்கொண்டு இருந்த பயணிகள் பேருந்தில் தீ பற்றி எரிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக பேருந்தை விட்டு 30 பயணிகளும் பத்திரமாக கீழே இறங்கி உயிர் தப்பினர். பின்னர் இது குறித்து பீளமேடு காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்து தீயணைப்புத் துறையினர் தீயை அணைப்பதற்குள் பேருந்து முழுவதுமாக எரிந்து நாசமானது.

முற்றிலும் எரிந்த பேருந்து.
இது குறித்து பீளமேடு காவல் துறையினர் டீசல் கசிவு அல்லது குளிர்சாதன பெட்டியில் இருந்து தீ விபத்து ஏற்பட்டதா என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தீப்பிடித்து எரிந்த மலைக்காடு

சாலையில் தீப்பற்றி எரிந்த காா்

பஞ்சு பேல் ஏற்றிவந்த வேன் தீயில் எரிந்து சேதம்

வாகைகுளம் அருகே தீப்பிடித்து எரிந்த அரசுப் பேருந்து
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு



