தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நீடிப்பது அந்தக் கட்சிக்கு நல்லதல்ல என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சாா்பில் போட்டியிட்ட கனிமொழி, தன்னை எதிா்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளா் சிவசாமி வேலுமணியைவிட 3,92,738 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா்.
இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் கனிமொழி எம்.பி. செய்தியாளர்களுடன் பேசியதாவது:
தமிழகத்தில் பாஜகவுக்கு இடமே இல்லை என்பதை தமிழக மக்கள் தெளிவுபடுத்தி உள்ளனர். நிறைய பேர் கனவோடு இருந்தார்கள், அது தெளிவாக்கப்பட்டுள்ளது.
ஆட்சி மாற்றம் வரவேண்டும் என்று என்பதுதான் என்னுடைய எண்ணம். இன்று(ஜூன் 5) மாலை நடைபெறவுள்ள இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அனைத்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.
தமிழக பாஜகவின் தலைவராக அண்ணாமலை நீடிப்பது அந்தக் கட்சிக்கு நல்லதல்ல. அதிமுக கடந்த காலத்தில் செய்த தவறுகளுக்கு தற்போது மக்கள் தண்டனை கொடுத்துள்ளார்கள் என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறிக்க நினைப்போருக்கு பாடம் புகட்ட வேண்டும்: கனிமொழி

கூடுதல் எம்.பி. தொகுதி: அன்று கருணாநிதி தடுத்தாா்; இன்று ஸ்டாலின் தடுக்கிறாா்! கே. அண்ணாமலை!!

திமுகவில் இணைந்தாா் அஜிதா ஆக்னல்

திருப்பரங்குன்றத்தில் பாஜகவின் வகுப்புவாத வன்முறை முயற்சி: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு
வீடியோக்கள்

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு



