/

திருப்பரங்குன்றத்தில் பாஜகவின் வகுப்புவாத வன்முறை முயற்சி: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் பாஜக வகுப்புவாத வன்முறையைத் தூண்ட முயற்சித்ததாக திமுக எம்.பி. கனிமொழி குற்றச்சாட்டு

News image

திமுக எம்.பி. கனிமொழி

கோப்புப் படம்

Updated On :2 ஏப்ரல் 2026, 2:55 pm

இணையதளச் செய்திப் பிரிவு

BJP tried communal violence game' in Tirupparankundram, says MP Kanimozhiதமிழ்நாட்டில் பாஜக வகுப்புவாத வன்முறையைத் தூண்ட முயற்சித்ததாக திமுக எம்.பி. கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.

மதுரையில் திமுகவின் தேர்தல் பிரசாரத்தில் கனிமொழி எம்.பி. பேசுகையில், உங்கள் (அதிமுக) தேர்தல் அறிக்கையை காப்பியடிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை. நீங்கள்தான் கலைஞர் கருணாநிதியின் வார்த்தைகளைக் கடன் வாங்கியுள்ளீர்கள்.

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க மக்கள் விரும்பவில்லை. வாக்குறுதிகளை நிறைவேற்றும் முதல்வரின் தலைமையின்கீழ் திமுகவையும் கூட்டணியையும்தான் மக்கள் ஆதரிக்கின்றனர்.

தமிழ் மக்கள் மற்றும் தமிழ்க் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பவர்களுக்கு வாக்களிக்கவே மக்கள் தயாராக உள்ளனர்.

பாஜக, நாட்டில் வகுப்புவாத வன்முறையைத் தூண்டுகிறது. திருப்பரங்குன்றத்திலும் அதே விளையாட்டை பாஜக முயற்சித்தது. ஆனால், அவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டினர்.

அனைத்து மதத்தினரும் தமிழ்நாட்டில் நல்லிணக்கத்துடன் வாழ்கின்றனர். இங்கு பல்வேறு மத நம்பிக்கைகள் உள்ளன. மேலும், மத அடிப்படையில் வெறுப்போ பழிவாங்கலோ சிறிதும் இல்லை என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.