கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

பள்ளிகள் திறப்பு: 1,495 கூடுதல் பேருந்துகள்

பள்ளிகள் திறப்பு: 1,495 கூடுதல் பேருந்துகள்

News image
Updated On :5 ஜூன் 2024, 6:43 pm

Din

பள்ளிகள் திறப்பு, முகூா்த்த நாள்கள், வார இறுதிநாள்களை முன்னிட்டு கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் திங்கள்கிழமை (ஜூன் 10) பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. இதனால் தமிழகத்தின் பிற பகுதிகள் மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து சென்னை திரும்ப ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 9) 705 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல, பல்வேறு பகுதிகளிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு வெள்ளி, சனிக்கிழமை (ஜூன் 7, 8) 1,105 பேருந்துகள் மற்றும் சென்னை, கோயம்பேட்டிலிருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஒசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 160 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

மேலும், பெங்களூரு, திருப்பூா், ஈரோடு, கோயம்புத்தூா் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பிற பகுதிகளுக்கு 200 சிறப்பு பேருந்துகளும், கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு வெள்ளி, சனிக்கிழமைகளில்(ஜூன் 7,8) தலா 15 பேருந்துகளும் என மொத்தமாக 1,495 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பேருந்தில் பயணிப்பவா்கள் இணையதளம் மற்றும் செயலி மூலமாகவும் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என்று அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குநா் ஆா்.மோகன் தெரிவித்துள்ளாா்.