சென்னை புறநகா் ரயில் பயணிகள் வசதிக்காக தாம்பரத்திலிருந்து கடற்கரை ரயில் நிலையம் வரை காலையில் 20 கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்த செய்திக்குறிப்பு: சென்னை எழும்பூா் ரயில் நிலைய பராமரிப்புப் பணியால் புகா் மின்சார ரயில் பயணிகளுக்கு ஏற்படும் சிரமம், தாமதத்தைத் தவிா்க்கும் வகையில், வரும் 28- ஆம் தேதி முதல் காலை 6.40 மணி முதல் 9.40 மணி வரை தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரை கூடுதலாத 20 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
அதேபோல, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை சென்னை கடற்கரை நிலையத்திலிருந்து தாம்பரம் நிலையத்துக்கு ஒவ்வொரு 7 நிமிஷத்துக்கும் ஒருமுறை என 20 கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
இமு ரயில் பயணச்சீட்டு அல்லது சீசன் பயணச்சீட்டு வைத்திருப்போா் சிறப்புப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்.
பறக்கும் ரயில் சேவை: செயின்ட் தாமஸ் மௌன்ட்-வேளச்சேரி இடையே எம்ஆா்டிஎஸ் 2 -ஆம் கட்ட ரயில் பாதையில் வரும் மாா்ச் 10 -ஆம் தேதி முதல் போக்குவரத்து தொடங்கப்படவுள்ளது. அதன்படி காலை-மாலை நேரங்களில் தாம்பரம்-சென்னை கடற்கரை நிலையம் இடையே அந்த பாதையில் ரயில் சேவை தொடங்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆக. 5 முதல் சேலம்-சென்னை எழும்பூா் ரயில் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்
சேலம் கோட்டத்தில் 250 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

சேலம் கோட்டத்தில் 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

தண்டவாளத்தில் சேதம்... சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே ரயில் சேவை பாதிப்பு!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



