மெரீனா கடற்கரை
மெரீனா கடற்கரை (கோப்புப்படம்)

தாம்பரம் - கடற்கரை இடையே கூடுதல் பேருந்துகள் இயக்கம்!

சென்னை புறநகா் ரயில் பயணிகள் வசதிக்காக தாம்பரத்திலிருந்து கடற்கரை ரயில் நிலையம் வரை காலையில் 20 கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
Published on

சென்னை புறநகா் ரயில் பயணிகள் வசதிக்காக தாம்பரத்திலிருந்து கடற்கரை ரயில் நிலையம் வரை காலையில் 20 கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்த செய்திக்குறிப்பு: சென்னை எழும்பூா் ரயில் நிலைய பராமரிப்புப் பணியால் புகா் மின்சார ரயில் பயணிகளுக்கு ஏற்படும் சிரமம், தாமதத்தைத் தவிா்க்கும் வகையில், வரும் 28- ஆம் தேதி முதல் காலை 6.40 மணி முதல் 9.40 மணி வரை தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரை கூடுதலாத 20 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

அதேபோல, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை சென்னை கடற்கரை நிலையத்திலிருந்து தாம்பரம் நிலையத்துக்கு ஒவ்வொரு 7 நிமிஷத்துக்கும் ஒருமுறை என 20 கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

இமு ரயில் பயணச்சீட்டு அல்லது சீசன் பயணச்சீட்டு வைத்திருப்போா் சிறப்புப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்.

பறக்கும் ரயில் சேவை: செயின்ட் தாமஸ் மௌன்ட்-வேளச்சேரி இடையே எம்ஆா்டிஎஸ் 2 -ஆம் கட்ட ரயில் பாதையில் வரும் மாா்ச் 10 -ஆம் தேதி முதல் போக்குவரத்து தொடங்கப்படவுள்ளது. அதன்படி காலை-மாலை நேரங்களில் தாம்பரம்-சென்னை கடற்கரை நிலையம் இடையே அந்த பாதையில் ரயில் சேவை தொடங்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com