தாம்பரம் - கடற்கரை இடையே கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
சென்னை புறநகா் ரயில் பயணிகள் வசதிக்காக தாம்பரத்திலிருந்து கடற்கரை ரயில் நிலையம் வரை காலையில் 20 கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்த செய்திக்குறிப்பு: சென்னை எழும்பூா் ரயில் நிலைய பராமரிப்புப் பணியால் புகா் மின்சார ரயில் பயணிகளுக்கு ஏற்படும் சிரமம், தாமதத்தைத் தவிா்க்கும் வகையில், வரும் 28- ஆம் தேதி முதல் காலை 6.40 மணி முதல் 9.40 மணி வரை தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரை கூடுதலாத 20 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
அதேபோல, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை சென்னை கடற்கரை நிலையத்திலிருந்து தாம்பரம் நிலையத்துக்கு ஒவ்வொரு 7 நிமிஷத்துக்கும் ஒருமுறை என 20 கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
இமு ரயில் பயணச்சீட்டு அல்லது சீசன் பயணச்சீட்டு வைத்திருப்போா் சிறப்புப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்.
பறக்கும் ரயில் சேவை: செயின்ட் தாமஸ் மௌன்ட்-வேளச்சேரி இடையே எம்ஆா்டிஎஸ் 2 -ஆம் கட்ட ரயில் பாதையில் வரும் மாா்ச் 10 -ஆம் தேதி முதல் போக்குவரத்து தொடங்கப்படவுள்ளது. அதன்படி காலை-மாலை நேரங்களில் தாம்பரம்-சென்னை கடற்கரை நிலையம் இடையே அந்த பாதையில் ரயில் சேவை தொடங்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

