ஆலங்குளத்தில் நின்ற லாரி மீது கார் மோதல்: ஓட்டுநர் பலி


ஆலங்குளத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியதில் ஓட்டுநர் பலியானார். 3 பேர் காயம் அடைந்தனர்.
ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் மணிகண்டன் (24). இவர் தனது நண்பர்கள் முத்துராஜ்(27) மணிராஜ்(34) தங்கராஜ்(22) ஆகியோருடன் காரில் குற்றாலம் சென்று குளித்துவிட்டு ஊர் திரும்பினார்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஆலங்குளம் வந்தபோது மலைக்கோயில் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த எரிவாயு உருளை லாரியின் பின் பகுதியில் இவர்கள் வந்த கார் மோதியது. இதில் கார் நொறுங்கியது. காரை ஓட்டி வந்த மணிகண்டன் நிகழ்விடத்திலேயே பலியானார்.
மற்ற மூவரும் படுகாயம் அடைந்தனர். ஆலங்குளம் தீயணைப்புத் துறையினர் வந்து சடலத்தை மீட்டனர். ஆலங்குளம் போலீஸார் சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்தவர்கள் அதே மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்து குறித்து ஆலங்குளம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...