திருப்பத்தூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளிக்குள் சிறுத்தை ஒன்று புகுந்ததால் பள்ளியில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
இன்று (ஜூன்14) ஜெயராமன் என்பவரது வீட்டருகே சுற்றித்திரிந்த சிறுத்தையைக் கண்ட பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் வந்த வனத்துறையினர் வலைகள் மூலம் சிறுத்தையைப் பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தனியார் மாணவிகள் பள்ளிக்குள் இருந்து வெளியேறிய சிறுத்தை குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்ததால் பொதுமக்களும் அச்சத்துடன் உள்ளனர். மாணவிகள் அனைவரும் பத்திரமாக பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
பள்ளியில் இருந்து வெளியேறிய சிறுத்தை தாக்கியதில் திருப்பத்தூரைச் சேர்ந்த கோபால் (51) என்பவரின் தலையில் பலத்த காயமடைந்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பல்ட் ஜான், முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மகேந்திரன் ஆகியோரின் உத்தரவின் பேரில் சிறுத்தையை தேடும் பணி தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
ஆட்சியரின் உத்தரவின் பேரில் ஒலிப்பெருக்கிகள் மூலம் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், வேலூரில் இருந்து வனத்துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

காயமடைந்த கோபால்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தரம் இல்லாத கேன் குடிநீர் விற்பனை செய்தால் ரூ. 5,000 அபராதம்!

வேதாரண்யம் தொகுதியில் 85 சதவீத வாக்குப்பதிவு

நாட்டில் ரயில் பாதை இல்லாத ஒரே பேரவைத் தொகுதி திருப்பத்தூர்: அண்ணாமலை குற்றச்சாட்டு

கடநாடு கிராமத்தில் குடியிருப்புப் பகுதியில் உலவிய சிறுத்தை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


