மதுரை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் சென்னைக்கு விமானப் பயணம்
மதுரை மாநகராட்சி பள்ளி மாணவர்களின் முதல் விமானப் பயணம்


மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் 10 மாணவர்களை தனியார் அமைப்பினர் திங்கள்கிழமை விமானத்தில் அழைத்துச் சென்றனர்.
ரோட்டரி கிளப் சார்பில் வானில் சிறகடிப்போம் என்ற தலைப்பில் மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் 10 மாணவ, மாணவியரை தேர்வு செய்து அவர்களை சென்னை அழைத்துச்செல்ல முடிவு செய்யப்பட்டது.
அதன்படி தேர்வு செய்யப்பட்ட 10 மாணவர்கள் திங்கள்கிழமை மதுரை விமான நிலையம் வந்தனர்.
மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி, ஆணையர் தினேஷ்குமார், மண்டலத்தலைவர் சுவிதாவிமல் ஆகியோர் விமான நிலையத்திற்கு வந்து பூ மற்றும் இனிப்புகள் வழங்கி மாணவர்களை வாழ்த்தி வழியனுப்பினர்.
இதைத் தொடர்ந்து 10 மாணவ, மாணவியர் மற்றும் ஒரு ஆசிரியர் என 11 பேர் மதுரையிலிருந்த விமான மூலம் சென்னை புறப்பட்டு சொன்றார்கள்.
சென்னையில் அவர்கள் சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை பார்த்துவிட்டு மீண்டும் பேருந்து மூலமாக மதுரை புறப்பட்டு வருகின்றனர்.
வானத்தில் பார்த்த விமானத்தில் முதல்முறையாக செல்வது மகிழ்ச்சியாக இருப்பதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...