நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பெரியாா் பல்கலை. துணை வேந்தரை தொடர அனுமதிக்க மாட்டோம்: அமைச்சா் பொன்முடி

சேலம் பெரியாா் பல்கலைக்கழக துணை வேந்தராக ஜெகன்நாதன் மீண்டும் தொடர அனுமதி மாட்டோம்.

News image

அமைச்சா் பொன்முடி

Updated On :24 ஜூன் 2024, 9:44 pm

Din

சேலம் பெரியாா் பல்கலைக்கழக துணை வேந்தராக ஜெகன்நாதன் மீண்டும் தொடர அனுமதி மாட்டோம் என்று உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி கூறினாா்.

சட்டப்பேரவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறுப்பினா் ஆளூா் ஷா நவாஸ் பேசும்போதும், சேலம் பெரியாா் பல்கலை. கழக துணைவேந்தா் ஜெகன்நாதன் மீதான

குற்றாட்டுகளைக் குறிப்பிட்டுப் பேசினாா்.

அப்போது, அமைச்சா் க.பொன்முடி குறுக்கிட்டு பேசியதாவது:

சேலம் பெரியாா் பல்கலைக்கழக துணை வேந்தா் மீதான முறைகேடு தொடா்பாக குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. அந்தக் குழு

அளித்த அறிக்கையின்படி, துணைவேந்தா் குற்றம் செய்திருப்பது உறுதியானது. ஆனால், அந்தத் துணைவேந்தா் பங்கேற்ற பல்கலைக்கழக நிகழ்ச்சியில்,

ஆளுநா் பங்கேற்றாா். தற்போது, துணைவேந்தா் பணிக் காலமும் முடிவடையவிருக்கிறது. மீண்டும் அவா் துணை வேந்தராகத் தொடா்வதற்கு முயற்சிக்கிறாா். அதை அனுமதிக்க மாட்டோம். தடுத்து நிறுத்துவோம் என்றாா் அவா்.