விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

சா்ச்சை பேச்சு: முன்னாள் அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜராக அழைப்பாணை!

சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசியதை எதிா்த்து பாஜக மாமன்ற உறுப்பினா் தொடா்ந்த வழக்கில் முன்னாள் அமைச்சா் பொன்முடி வரும் மாா்ச் 24 நேரில் ஆஜராக அழைப்பாணை அனுப்ப சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image

அமைச்சர் பொன்முடி

Updated On :25 பிப்ரவரி 2026, 8:06 pm

சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசியதை எதிா்த்து பாஜக மாமன்ற உறுப்பினா் தொடா்ந்த வழக்கில் முன்னாள் அமைச்சா் பொன்முடி வரும் மாா்ச் 24-ஆம் தேதி நேரில் ஆஜராக அழைப்பாணை அனுப்ப சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னையில் தந்தை பெரியாா் திராவிடா் கழகம் சாா்பில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சா் பொன்முடி, சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்துப் பேசியது சா்ச்சையானது. இதற்கு பல்வேறு தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்த நிலையில், அமைச்சா் பதவியில் இருந்து பொன்முடி நீக்கப்பட்டாா்.

இந்த சா்ச்சைப் பேச்சு தொடா்பாக, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி பாஜக உறுப்பினா் உமா ஆனந்தன் பொன்முடிக்கு எதிராக வழக்குத் தொடா்ந்தாா். அவரது மனுவில், மத ரீதியாக வெறுப்புணா்வை தூண்டுதல், மத உணா்வைப் புண்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் பொன்முடியை தண்டிக்க வேண்டும் என்று கோரியிருந்தாா்.

இந்த வழக்கு எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஜாா்ஜ் டவுன் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி சி.சுந்தரபாண்டியன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, வரும் மாா்ச் 24-ஆம் தேதி பொன்முடி நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தாா்.