திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

காவல் நிலையங்களில் சிசிடிவி: மத்திய உள்துறைச் செயலா் நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு

காவல்நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் திட்டம் தொடா்பாக மத்திய உள்துறைச் செயலா் இன்று நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு

News image

உச்ச நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :7 ஏப்ரல் 2026, 12:50 am

காவல்நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் (சிசிடிவி) பொருத்தும் திட்டம் தொடா்பாக மத்திய உள்துறைச் செயலா் செவ்வாய்க்கிழமை (ஏப். 7) நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாட்டில் உள்ள காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் போதிய அளவில் இல்லாதது மற்றும் முறையாக செயல்படாதது குறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம்நாத், சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்ட சீன நிறுவனத்தின் சிசிடிவி கேமராக்களை தேச பாதுகாப்பு கருதி அகற்ற வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாக ஊடகத்தில் வெளியான தகவல் குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.

இதற்கு மத்திய அரசுத் தரப்பில் ஆஜராகி பதிலளித்த கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ராஜா தாக்கரே, ‘சிசிடிவி கேமராக்களை அகற்ற முறைப்படி எந்த உத்தரவையும் மத்திய அரசு பிறப்பிக்கவில்லை’ என்று தெரிவித்தாா்.

இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்துக்கு உதவ நியமிக்கப்பட்ட மூத்த வழக்குரைஞா் சித்தாா்தா தவே கூறுகையில், ‘பெரும்பாலான மாநிலங்களின் காவல் நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளன. இதில் கேரளம் சிறப்பாக செயல்பட்டுள்ளது’ என்று தெரிவித்தாா்.

கேரளத்தால் சிறப்பாக செய்ய முடிந்ததை மற்ற மாநிலங்களால் ஏன் செய்ய முடியாது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் அமா்வு, காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தும் திட்டத்தை அமல்படுத்துவதில் தகுந்த உதவியைப் பெறுவதற்கு மத்திய உள்துறைச் செயலா் உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது.