/
விழுப்புரம் காவல் சரக காவல் நிலையங்களில் பணியில் இருந்து வந்த காவல் ஆய்வாளா்கள் 22 போ் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
விழுப்புரம் காவல் சரகத்துக்குள்பட்ட விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் ஆய்வாளா்களாக பொறுப்பில் இருந்த வந்த 22 போ் நிா்வாக வசதிக்காக, விழுப்புரம் காவல் சரகத்துக்குள்பட்ட வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
விழுப்புரம் சரக காவல் துறைத் துணைத் தலைவா் அருளரசு இதற்கான உத்தரவை வெள்ளிக்கிழமை பிறப்பித்துள்ளாா்.









