நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

படகுகள் மோதியதில் இலங்கை வீரர் பலி! தமிழக மீனவர்கள் 10 பேர் கைது

தமிழக மீனவர்களின் படகு மீது இலங்கை கடற்படை படகு மோதல்!

News image

கோப்புப்படம்

Updated On :25 ஜூன் 2024, 10:24 am IST

இலங்கை கடற்படை வீரர் கடலில் விழுந்து உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

நெடுந்தீவு அருகே எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக 10 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது.

நாகப்பட்டினம் கடற்கரை காவல் நிலையத்திற்கு உட்பட்ட அக்கரைபேட்டை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஜூன் 21-ஆம் தேதி அதிகாலை 4-மணியளவில் 10 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.

மீனவ கிராமமான திடீர்குப்பம் பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல் மகன் ஆனந்தன்(52) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடலுக்குச் சென்ற மீனவர்கள், இன்று(ஜூன் 25) அதிகாலை 1.30 மணியளவில் கோடியக்கரைக்கு கிழக்கே சுமார் 40 நாட்டிக்கல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி மீனவர்கள் 10 பேரை கைது செய்தனர்.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசம் துறைமுகம் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களின் விபரம்:

1.மதி (38) - அக்கரைபேட்டை

2.ராஜேஷ் (35) - அக்கரைபேட்டை

3.முத்து செட்டி (70) - அக்கரைப்பேட்டை

4.வைத்தியநாதன் (45) - வானவன் மாதேவி

5.மணிபாலன் (55) - கடலூர்

இவர்களுடன் சேர்த்து படகில் பயணித்த கீச்சாங்குப்பம், டாட்டா நகர், வானவன்மாதேவி, கங்கால கொருலையா(ஆந்திர பிரதேசம்) ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இலங்கை கடற்படை மீனவர்கள் படகை விரட்டிச் சென்று பிடிக்க முற்பட்டபோது, மீனவர்களின் படகு மீது கடற்படை படகு மோதி விபத்து ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக மீனவர்களுக்கும் கடற்படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும், படகு வேகமாக மோதியதில் இலங்கை கடற்படை வீரர் ஒருவர் கடலில் விழுந்து உயிரிழந்துவிட்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர் இலங்கையை சேர்ந்த ரத் சிங் என்ற தகவலை இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.