
தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு
இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை செய்யப்பட்டிருப்பது பற்றி....

கோப்புப் படம்
இலங்கையில் தஞ்சமடைந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரை அபராதத்துடன் அந்நாட்டு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 11 மீனவர்கள் கடந்த ஆக. 6ஆம் தேதி கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், அவர்களின் விசைப்படகையும் இலங்கை அதிகாரிகள் சிறைபிடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இவ்விவகாரத்தில் சிறைப்பிடிக்கப்பட்ட 11 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில் மீனவர்கள் 11 பேரையும் இலங்கை அரசு இன்று விடுதலை செய்துள்ளது.
மீனவர்கள் 11 பேரின் வழக்கை விசாரித்த ஊர்க்காவல்துறை நீதிமன்றம் இலங்கை மதிப்பில் தலா ரூ. 50,000 அபராதத்துடன் விடுதலை செய்து உத்தரவிட்டது.
Summary
An order has been issued by a Sri Lankan court releasing 11 Rameswaram fishermen who had taken refuge in Sri Lanka, imposing a fine.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







