நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

ஆணும் பெண்ணும் சமம், ஆனால்.. : சுதா மூர்த்தியின் கருத்து

ஆணும் பெண்ணும் சமம்தான், ஆனால் அவர்கள் வெவ்வேறானவர்கள் என்கிறார் சுதா மூர்த்தி

News image

சுதா மூர்த்தி - Center-Center-Bangalore

Updated On :28 ஜூன் 2024, 1:12 pm IST

என்னுடைய பார்வையில் ஆணும் பெண்ணும் சமம்தான், ஆனால் வெவ்வேறு விதத்தில் என்கிறார் மாநிலங்களவை உறுப்பினர் சுதா மூர்த்தி.

மேலும், ஆணும் பெண்ணும் ஒரு சைக்கிளின் இரண்டு சக்கரங்களைப் போல ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும், ஒருவர் ஒத்துழைப்பு அல்லாமல் மற்றொருவர் முன்னேற முடியாது என்று தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளார் சுதா மூர்த்தி.

எழுத்தாளரும், சமூக ஆர்வலரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுதா மூர்த்தி அண்மையில் தன்னுடைய எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

அந்த விடியோ, பாலின சமத்துவம் குறித்த சுதா மூர்த்தியின் பார்வையை விளக்கும் வகையில் அமைந்துள்ளது.

அவர் ஆண்களையும் பெண்களையும் "ஒரு மிதிவண்டியின் இரண்டு சக்கரங்களுடன்" ஒப்பிட்டுள்ளார். இரு சக்கரங்களைப் போல ஆணும் பெண்ணும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும், ஒரு சக்கரத்தின் ஒத்துழைப்பு அல்லாமல் மற்றொன்று முன்னோக்கிச் செல்ல முடியாது.

இரண்டு பாலினத்தவர்களும் வெவ்வேறானவர்கள், இருவருக்குமே பலமும் பலவீனமும் இருக்கும். வாழ்க்கை என்பது சைக்கிள் போன்றது, ஒரு சக்கரம் ஆணாகவும், மற்றொரு சக்கரம் பெண்ணாகவும் இருக்கும். இருவருமே சேர்ந்துதான் இயங்க வேண்டும்.

ஆண்களை விடவும் பெண்கள் மிக வித்தியாசமாகப் உருவாக்கப்பட்டுள்ளனர் என்கிறார் அவர், அதாவது பெண்கள் பொதுவாக மொழிகளில் மிகவும் திறமையானவர்கள், அதுமட்டுமல்ல, பெண்கள் சிறந்த மேலாளர்களாக இருப்பார்கள், இரக்கமுள்ளவர்கள் மற்றும் கொடுக்கும் பண்புடையவர்கள். அவர்கள் அன்பு, பாசம் என அனைவருக்கும் அன்பைக் கொடுப்பார்கள்.

அதேவேளையில், ஆண்கள் வித்தியாசமானவர்கள் "அவர்கள் வித்தியாசமாக பின்னப்பட்டவர்கள், அவர்களின் உணர்வுப்பூர்வமான அணுகுமுறை பெண்களைப் போல இருக்காது, அவர்களுக்கு நல்ல புலனாய்வு அறிவு இருக்கலாம், ஆனால் அவர்களுக்கு நிச்சயமாக நல்ல உணர்வுப்பூர்வமான அணுகுமுறை இருக்காது என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தனது சமூக வலைத்தளத்தில் பலருக்கும் நல்ல கருத்துகளை தெரிவித்து வருகிறார் சுதா மூர்த்தி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.