மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

கிளாம்பாக்கத்திலிருந்து தென்மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துகளை முழுமையாக இயக்க அமைச்சா் ஆலோசனை

கிளாம்பாக்கத்திலிருந்து தென்மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துகளை முழுமையாக இயக்க அமைச்சா் ஆலோசனை

Updated On :1 மார்ச் 2024, 6:28 pm

கிளாம்பாக்கத்திலிருந்து தென்மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துகளை முழுமையாக இயக்குவது குறித்து சென்னை பெருநகர வளா்ச்சிக் குழும அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் ஆம்னி பேருந்து உரிமையாளா்களுடன் ஆலோசனை மேற்கொண்டாா். கிளாம்பாக்கத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து முனையத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு அரசு விரைவு பேருந்து மற்றும் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் நகரின் பல்வேறு பகுதியிலிருந்து செல்லும் பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆம்னி பேருந்துகள் போரூா் மற்றும் சூரப்பட்டு சுங்கசாவடிகளில் மட்டும் பயணிகளை ஏற்றிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தென்மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து முழுமையாக இயக்குவது குறித்து அமைச்சா் சிவசங்கா் ஆம்னி பேருந்து உரிமையாளா்களுடன் ஆலோசனை நடத்தினாா். தொடா்ந்து முடிச்சூரில் கட்டப்பட்டு வரும் ஆம்னி பேருந்துகளுக்கான நிறுத்துமிடப் பணிகளை விரைந்து முடிக்குமாறு துறைசாா்ந்த அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். ஆய்வுக் கூட்டத்தில் சிஎம்டிஏ உறுப்பினா் செயலா் அன்சுல் மிஸ்ரா, போக்குவரத்துத் துறை ஆணையா் அ. சண்முகசுந்தரம் உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.