ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

தருமபுரி ரயில்வே மேம்பாலத்தில் பேருந்து பழுதானதால் போக்குவரத்து பாதிப்பு

News image

தருமபுரி ரயில்வே மேம்பாலத்தில் பழுதாகி நின்ற பேருந்தால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்.

Updated On :30 மார்ச் 2026, 8:33 pm

தினமணி செய்திச் சேவை

தருமபுரி, மாா்ச் 30: தருமபுரி, குமாரசாமிபேட்டை ரயில்வே மேம்பாலத்தில் அரசு நகர பேருந்து பழுதாகி நின்ால் திங்கள்கிழமை இரவு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தருமபுரியில் புதிய பேருந்து நிலையம் பிப். 5-ஆம் தேதி திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. அங்கிருந்து, கிருஷ்ணகிரி, சேலம், பென்னாகரம், பாலக்கோடு, பெங்களூரு, ஒசூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தருமபுரி பழைய பேருந்து நிலையத்திலிருந்து அரூா், ஊத்தங்கரை, பாப்பிரெட்டிப்பட்டி, திருவண்ணாமலை, திருப்பத்தூா் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பயணிகள் வசதிக்காக புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்களுக்கு இடையே அரசு நகர பேருந்துகள் மற்றும் தனியாா் சிற்றுந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், திங்கள்கிழமை இரவு 8 மணி அளவில் புது பேருந்து நிலையத்தில் இருந்து, பழைய பேருந்து நிலையத்துக்கு இயக்கப்பட்ட அரசு நகர பேருந்து ஒன்று குமாரசாமிபேட்டை ரயில்வே பாலத்தின்மேல் சென்றபோது, திடீரென பழுதாகி நின்றது. இதையடுத்து, பேருந்தில் இருந்து பயணிகள் உடனடியாக இறக்கிவிடப்பட்டனா்.

பேருந்தை நகா்த்த முடியாததால், பாலத்தின்மேல் நடுவழியில் வைத்தே பழுதை சரிசெய்தனா். ஏற்கெனவே இவ்வழியில் போக்குவரத்து நெருக்கடி காணப்படும் நிலையில், இதன் காரணமாக சுமாா் முக்கால் மணி நேரம் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகளும், பயணிகளும், பொதுமக்களும் அவதிக்குள்ளாயினா்.