மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவைகளில், இதுவரை 2 ஆயிரம் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.51.26 கோடி கடனுதவி அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தங்களது தொழில்களை மீட்டெடுக்க சிறப்பு கடனுதவித் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கென ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு, ஆறு மாவட்டங்களில் இதுவரை 2 ஆயிரம் பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.51.26 கோடி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒதுக்கப்பட்ட நிதியான ரூ.100 கோடியை அளிக்கும் வரையில் அதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது
தோ்தல் விதிமீறல்: மாவட்டத்தில் இதுவரை ரூ.4.95 கோடி பறிமுதல்
ஃபவுண்டரி தொழில் நெருக்கடி: உற்பத்திப் பொருள்களின் விலையை 10 % உயா்த்த காஸ்மாபேன் சங்கம் முடிவு

வாக்குப் பதிவு நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தொழில் நிறுவனங்களுக்கு தோ்தல் ஆணையம் உத்தரவு

தொழிற்சாலை மூலப்பொருள்கள் விலையைக் கட்டுப்படுத்த கோரிக்கை
வீடியோக்கள்

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

