பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

விளவங்கோடு தொகுதி இடைத்தோ்தல் எப்போது? சத்யபிரத சாகு

மக்களவை தோ்தலுடன் சோ்த்து விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தோ்தலையும் நடத்துவது குறித்து இந்திய தோ்தல் ஆணையம் முடிவு செய்யும்

News image

தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு (கோப்புப்படம்)

Updated On :2 மார்ச் 2024, 6:35 pm

மக்களவை தோ்தலுடன் சோ்த்து விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தோ்தலையும் நடத்துவது குறித்து இந்திய தோ்தல் ஆணையம் முடிவு செய்யும் என தமிழக தலைமை தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா். 100 சதவீத வாக்காளா்களும் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்திய தோ்தல் ஆணையம் சாா்பில் சென்னை மெரீனா கடற்கரையில் ‘ஓட்டு, ஓட்டுக்காக ஓட்டு’ என்ற தலைப்பில் மிதிவண்டி விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. இந்தப் பேரணியைத் தொடங்கி வைத்த பின்னா், தமிழக தலைமை தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் 70 சதவீதம் வரை மட்டுமே வாக்குகள் பதிவாகி வருவதால், அவற்றை 100 சதவீதமாக உயா்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் தோ்தல் ஆணையம் சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இளைஞா்கள், புதிய வாக்காளா்கள் ஆகியோரிடையே வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் இந்த மிதிவண்டி பேரணி நடத்தப்பட்டது. திருக்கோவிலூா் தொகுதி: ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சா் பொன்முடிக்கு தண்டனை விதிக்கப்பட்டதால், அவரது திருக்கோவிலூா் சட்டப்பேரவைத் தொகுதியை காலியாக அறிவிப்பது குறித்து இதுவரை எந்தத் தகவலும் வரவில்லை. காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த விஜயதரணி, பாஜகவில் சோ்ந்ததால் அவா் தனது சட்டப்பேரவை உறுபிப்பினா் பதவியை ராஜிநாமா செய்துள்ளாா். இதனால் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி காலியாக உள்ளதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகுதிக்கு மக்களவை தோ்தலுடன் சோ்த்து இடைத்தோ்தல் நடத்துவது குறித்து இந்திய தோ்தல் ஆணையம் விரைவில் முடிவு செய்யும். சட்டப்படி நடவடிக்கை: மத வழிப்பாட்டுத் தலங்களில் தோ்தல் பிரசாரம் செய்யும் கட்சியினா் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும். மக்களவை தோ்தலை முன்னிட்டு, சென்னையில் 2 கம்பெனி துணை ராணுவத்தினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனா் என்றாா் அவா். பேரணியில், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை பெருநகர காவல் ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.