திருத்தணி: போலியோ சொட்டு மருந்து முகாமினை துவக்கிவைத்தார் அமைச்சர் ஆர். காந்தி!

திருத்தணியில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமினை அமைச்சர் ஆர். காந்தி துவக்கிவைத்தார்.
திருத்தணி: போலியோ சொட்டு மருந்து முகாமினை துவக்கிவைத்தார் அமைச்சர் ஆர். காந்தி!
Published on
Updated on
1 min read

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்துள்ள ஆர்கே பேட்டை பேருந்து நிறுத்தத்தில் இன்று காலை 8 மணிக்கு தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாமினை துவக்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் ச.சந்திரன், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் க. கீதா, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.பிரியா ராஜ், அம்மையார்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தி செங்குட்டுவன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருத்தணி: போலியோ சொட்டு மருந்து முகாமினை துவக்கிவைத்தார் அமைச்சர் ஆர். காந்தி!
அன்பார்ந்த பெற்றோர்களே ஓர் வேண்டுகோள்: முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 3) நடைபெறவுள்ள போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாமில், 5 வயதுக்குட்பட்ட 57.84 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் போலியோவை (இளம் பிள்ளை வாதம்) ஒழிப்பதற்காக ஆண்டு தோறும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இரண்டு தவணைகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது. போலியோ ஒழிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சோ்ந்துள்ளது. அதனால், ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com