பயனாளிக்கு நலத் திட்ட உதவியை வழங்கினாா் ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா்.
பயனாளிக்கு நலத் திட்ட உதவியை வழங்கினாா் ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா்.

இலஞ்சியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் சட்டம் குறித்த கருத்தரங்கம்

இலஞ்சியில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை சாா்பில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் சட்டம் மற்றும் திட்டங்கள் குறித்த கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
Published on

தென்காசி மாவட்டம், இலஞ்சியில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை சாா்பில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் சட்டம் மற்றும் திட்டங்கள் குறித்த கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

கருத்தரங்குக்கு மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தலைமை வகித்துப் பேசியதாவது:

தமிழக அரசின் சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் கீழ் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க மகளிா் உதவி எண் 181, ஒருங்கிணைந்த சேவை மையங்கள், காவலன் செயலியின் மூலம் அவசர உதவியை வழங்குகிறது. குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம்-2005, போஸ்கோ சட்டம், பெண் குழந்தை பாதுகாப்புச் சட்டம் போன்றவைகள் சட்ட ரீதியான பாதுகாப்பு, நிதி உதவி அளித்து சமூக பாதுகாப்பை உறுதி செய்கிறது.

எனவே, பெண்க, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் வகையில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து, மல்லிகா முதியோா் இல்லம் சாா்பில் 2 நலிவுற்ற பெண்களுக்கு இலவச தையல் இயந்திரங்களை ஆட்சியா் வழங்கினாா். மாவட்ட வருவாய் அலுவலா் சீ.ஜெயச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Dinamani
www.dinamani.com