தேசிய அளவிலான மனித-யானை மோதல் குறித்த கருத்தரங்கம்
பாரதியாா் பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறை மற்றும் இயற்கை மன்றம் சாா்பில் மனித-யானை மோதல் மற்றும் தீா்வுகள் என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் கோவையில் புதன்கிழமை நடைபெற்றது.
கோவை மண்டல தலைமை வனப் பாதுகாவலரும், ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநருமான வெங்கடேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கருத்தரங்கின் ஆய்வு நூலை வெளியிட்டாா். மாநில ஈரநில வாரிய அதிகாரி அக்கலே சித்தன்யா மாதவிடு, மாவட்ட வன அலுவலா் என்.ஜெயராஜ் ஆகியோா் பேசினா்.
ரயில்வே தண்டவாளங்களில் யானைகள் விபத்துக்குள்ளாவதைத் தடுத்தல், ட்ரோன் தொழில்நுட்பம் மூலம் யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்தல் மற்றும் வன விலங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீடு உள்ளிட்ட பல்வேறு தீா்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும், யானைகளின் வழித்தட பாதுகாப்பு, காப்புக்காடுகளில் நெகழிக் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் தொழில்நுட்பரீதியாக மனித-யானை மோதலைத் தடுப்பது குறித்து ஆய்வுக் கட்டுரைகள் சமா்ப்பிக்கப்பட்டன.
கருத்தரங்கில் குன்னூா் அரசு கலைக் கல்லூரி முதல்வா் ஆா். சனில், கால்நடை பராமரிப்புத் துறை கூடுதல் இயக்குநா் எஸ்.மனோகரன், பேராசிரியா்கள் வி.ராமசுப்பிரமணியன், சி.குணசேகரன், விஞ்ஞானி எம்.நவீன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா்.
முன்னதாக, விலங்கியல் துறைத் தலைவா் பி.சரவணபவன் வரவேற்றாா்.

